உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

🕔 February 20, 2023

ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரச அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால், அரச அச்சகம் – உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால், எதிர்வரும் 22, 23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.

இதனிடையே, எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், திட்டமிட்டவகையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லையென உச்ச நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்