சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல்
மினுவங்கொட ஆடைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவிர, சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சிலா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை காலை கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.
இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.