20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர்
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 05 ஆம் திகதி நிறைவடைந்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவற்றில் இரு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனையின் வியாக்கியானம் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் கடந்த 05 ஆம் திகதி அறிவித்தது.