5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம்
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அரசாங்கம் நிவாரணமாக வழங்கி வரும் 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக சுட்டிக்காட்டியே அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கொடுப்பனவு குறித்து பல்வேறு முறைப்பாடுகளும், புகார்களும் பொதுமக்களிடையே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.