ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு

🕔 September 13, 2021

ப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

‘க்ரூஸ்’ ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை.

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியாவின் யோன்ஹப் ஊடகம் செய்தி குறிப்பிட்டுள்ளது.

வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்