காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம்

🕔 August 6, 2021

வாழைச்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாக்குப் பை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

55 வயதான வாழைச்சேனைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வங்கிக்கு செல்வதாக அவர் முச்சக்கர வண்டியில் சென்ற பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

வாழைச்சேனை நகர் பகுதியிலுள்ள கடையொன்றினுள் உள்ள இரண்டு சாக்குப் பைகள் குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் சோதனை செய்த போது ஒரு பையில் உரமும் மற்றொரு பையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்