மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்

🕔 May 10, 2021

கொவிட் தொற்று வேகமாக பரவுவதால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கஅரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் மே மாதம 30 வரை இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 பணிக்குழு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் இலங்கை வைத்திய சங்கத்தினர் ஆகியோருக்கும் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று பிற்பகல் நடைபெற்ற சந்திப்பில், நாட்டை முழுமையாக முடக்காமல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக, ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்