இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார்

🕔 January 29, 2021

ந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டது.

இதேவேளை, தடுப்பூசி ராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 05 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்