‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை

🕔 January 1, 2021

– எம்.எப்.எம். பஸீர் –

ல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது. 

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று ரகசிய அறிக்கையாக இதனைக் கையளித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு தொடர்பில், எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவை தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முன்னர் சேவையாற்றியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பதாகவும், இணையத்தளம் ஊடாக இக்குழுவினர் அடிப்படைவாதத்தை விதைத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஒன்றை அடுத்து கிடைக்கப் பெற்ற  நன்கொடைகளை வைத்து இவ்வமைப்பு தோற்றம் பெற்றுள்ளதாகவும், தற்போதும் வெளிநாட்டு நன்கொடைகள் அவ்வமைப்புக்கு கிடைப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும்  அறிய முடிகின்றது.

இந்த ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பின் தலைவராக கருதப்படும் நபரும் அவ்வமைப்பின் போதகர்களும் யூடியூப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும், அவ்வமைப்பில் 33 செயற்பாட்டாளர்களும், 250 வரையிலான ஆதரவாளர்களும் உள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே அவ்வமைப்பு தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்