சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

🕔 November 5, 2015
Mahinda Rajapaksa - 011ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்ப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்காக, முன்னணியின் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னணியில் எந்த ஒரு கட்சியையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாதெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்