சந்தாங்கேணி மைதான நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தீர்மானம்

🕔 August 17, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

ல்முனை சந்தாங்கேணி மைதான நுழைவாயில் பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை தற்காலிகமாக மேற்கொள்ள முடியும் எனவும், ஏனைய அனுமதிக்கப்படாத நிரந்தர கட்டடங்களை அகற்றுவதென கல்முனை பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை சந்தாங்கேணி நுழைவாயில் பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் கட்டடங்களை அமைத்திருப்பது, எதிர்காலத்தில் குறித்த மைதானத்தின் அபிவிருத்தி மேற்படி முடிவு எட்டப்பட்டது.

கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில்இன்று வியாழக்கிழமை காலை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் விளக்கமளித்தனர்.

மேலும், தனியார் நிறுவனத்தினால் கல்முனை மாநகர பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கேபிள் தொலைக்காட்சியினால் கலாசார சீரழிவு ஏற்படுவதாகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களில் அவர்களின் கேபிள்கள் அனுமதி பெறப்படாத நிலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டை தடைசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ரகசிய பொலிசார் ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜதுரை, சமுர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்