மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

🕔 July 1, 2016

Basheer - 034333ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார்.

ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான பணய நாடகங்கள் எவ்­வ­ளவு காலம் நீடித்­தது என்­ப­தையும் தலைவர் வெளிப்படுத்த வேண்டுமெனவும், தனது அறிக்கையில் பசீர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“தனித்­திரு, பசித்­திரு, விழித்­திரு எனப்­ப­டு­கின்ற நோன்பின் இஸ்­லா­மிய உப­வாசத் தத்துவம் பேசப்­ப­டு­கின்ற இக்­கால கட்­டத்தில், கடந்த 27ஆம் திகதி காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற இப்தார் நிகழ்­வொன்றில் தலைவர் ரவூப் ஹக்கீம் உரை­யாற்­று­கையில்; தன­து ­த­லை­மை­யை­ ப­ணயக்கைதி­யாக வைத்து இனிமேல் அர­சியல் செய்ய இடமளிக்கப் போவ­து­மில்லை, பதவி நோக்­கத்­தில் யாரும் இந்தக் கட்­சியை அடகுவைத்து பிழைப்­ப­தற்கு இனி­மேலும் நாங்கள் இடம் கொடுக்­க­வும் ­மாட்­டோம்­ என்ற ஆரோக்­கி­ய­மான கருத்தைத் தெரி­வித்­துள்ளார்.

தலை­மை­யையும் கட்­சி­யையும் அவர் அகப்­பட்டுக் கொண்ட எவ்­வி­த­மான விடயங்களில், எந்தத் தரு­ணங்­களில், எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்­தி­ருந்­தனர் என்­ப­தையும் – அவ­ரது 16 வருட தலை­மைத்­துவக் காலத்துள், இவ்­வா­றான பணய நாடகங்கள் எவ்­வ­ளவு காலம் நீடித்­தது என்­ப­தையும் மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வரின் கட­மை­யாகும்.

இனி மேலும் இவ்­வா­றான விட­யத்­திற்கு இட­மில்லை என்­று­ அவர் கூறி­யி­ருப்­ப­தா­னது, இதற்கு முன் நிச்­ச­ய­மாக நடந்த விட­யங்­க­ளுடன் துல்­லி­ய­மாக உடன்­படும் கருத்தேயாகும். இவ்­வி­டயம் பற்றி தலைமை முழு­மை­யாகப் பகி­ரங்­கப்­ப­டுத்தும் போது, கடந்த 16 வரு­டங்­க­ளாக அவ­ரது தலைமை நிமிர்ந்து நின்று நிலைத்த வரலாற்றையா அல்­லது சர­ண­டைந்து சரிந்­த­வ­ர­லாற்­றையா வெளிப்­ப­டுத்­து­கி­றது என்­பது மக்­க­ளுக்குத் தெளிவாகும்.

ஆகையால் இவ்­வி­வ­ரணம் கட்­சியைத் தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் ஒருமைல் கல்லாக அமையும்.

எனது கடந்த கால அர­சியல் வாழ்வில் பல தனிப்­பட்ட நிகழ்­வு­களின் ர­க­சி­யங்கள் புதைந்து கிடப்­ப­தா­கவும், நான் பிர­நி­தித்­துவ அர­சி­ய­லி­லிருந்து வில­கிய பின்புலத்தில் அவை வெளிவரும் வாய்ப்­புள்­ள­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வேறு சில­ ஊ­டக கட்­டு­ரை­க­ளிலும் எழு­தப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போது மட்­டு­மல்ல, கடந்த சில கால­மா­கவே முஸ்லிம் அர­சி­யலில் தனிப்­பட்ட கிசுகிசு பற்றி நான் அறிவேன் என்றும், அவை விரைவில் வெளிவ­ரக்­கூடும் என்றும் அர­சியல் பரப்பில் பரப்­பு­ரைகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. மேலும் சில அரசியல்வாதி­களால் இதே கருத்து தெரி­விக்­கப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடிகி­றது.

இதேவேளை எந்­த­வொரு அர­சியல் தலை­வ­ரி­னதும் கண்­ணுக்குப் புலப்­ப­டாத தனிப்பட்­ட­ வாழ்க்கை தொடர்பில் எவ்­வித ர­க­சி­யங்­களின் தட­யங்­களும் என் வசமில்லை என்­பதை பகி­ரங்­க­மாகத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

கடந்த காலங்­களின் அந்­த­ரங்­கங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாகக் கூறி மிரட்டல் விடுத்து, எனது அர­சி­யலைச் செய்து வரு­கிறேன் என்று ஒரு­சாரார் குடு­கு­டுப்பைப் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர்.

தனிப்­பட்ட அர­சியல்வாதி­களின் சப­லங்கள், முஸ்லிம் அடை­யாள அர­சி­யலைப் பலிகொண்டு விடக்­கூ­டாது என்­பதில் கடந்த பதி­னைந்து வரு­டங்­க­ளாக மிக்க கரிசனையுடன் இயங்கி வந்­துள்ளேன்.

அஷ்­ரஃபின் காலம் தொடங்கி, தனி அர­சியல் தலை­வர்­களை அழித்து விட்டால் முஸ்லிம் தேசிய இனத்­துவ அர­சி­யலை அழிக்க முடியும் என்று நம்பி அரசியல்வாதிகளில் சிலர் செயற்பட்­டு­வந்­தனர். இந்த நம்­பிக்கை வெற்றி பெறு­வ­தற்கு வாய்ப்பு உள்­ளது என்­பதை நான் ஊகித்து அறிந்த கார­ணத்­தினால், இக்கோட்பாட்டுக்கு எதி­ராக 2000ஆம் ஆண்­டு­களின் நடுப்­ப­கு­தியில் தீவி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்தேன்.

எனது அந்தக் காலகட்ட அர்ப்­ப­ணிப்பு என்­பது 2005ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்று வரை­யுள்ள 11 ஆண்­டு­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸை வீழ்ந்து விடாது வைத்­தி­ருக்கும் காரணிகளில் ஒன்­றாகும்.

மற்றும், அடுத்­த­வரின் அந்­த­ரங்­கங்­களை மூல­த­ன­மாக்கி சொந்த அர­சி­யலை கட்டமைக்கும் மூன்­றாந்­தரச் செயலை எனது வர­லாற்றில் என்­றுமே நான் செய்ததில்லை.

எனது பொது­வாழ்வில் நிகழ்ந்­தே­றிய ஆவ­ணப்­ப­டுத்தத் தகுதி பெற்­ற ­அ­ர­சியல் வரலாற்றுத் தட­யங்­களைத் தவிர, ஏனைய அனைத்து கசப்­பான சம்­ப­வங்­க­ளையும் எனது நினை­வுக்­கி­டங்­கி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி நீண்­ட­ கா­ல­மா­கி­விட்­டது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்