நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளிக்க தவறியிருந்தார்.
ஆயினும், அது தொடர்பில் – அவர் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்தே, மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.