தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம்
இந்தியாவின் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகிறது.
அந்தவகையில் காலை 07 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக – காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி – த.மா.கா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுதரப்புக்கள் போட்டியில் குதித்துள்ளன.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் போட்டியிடுகின்றனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டு மன்னார்கோவிலிலும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்திலும் களமிறங்கியுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந் தரராஜன் விருகம்பாக்கத்திலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரிலும் போட்டியிடுகின்றனர்.