பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு 0
– எம்.எஸ்.எம். நூர்தீன் – பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்