ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் 0
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.