பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து 0
– மப்றூக் – இலங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை,