விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம்

🕔 August 23, 2018
– யூ.எல்.எம். றியாஸ் –

பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை, மாவடிப்பள்ளி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவடிப்பள்ளியில் உள்ள 12 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்; ‘பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே எங்களது விடயத்தில் கவனமெடுங்கள்’, ‘நல்லாட்சி அரசே பொது மைதானம் அமைத்துத் தாருங்கள்’ என்பவை போன்ற பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளைத் தங்கியிருந்தனர்.

தற்போது இப் பிரதேசத்திலுள்ள வீரர்கள்,  மாவடிப்பள்ளியில் உள்ள அல் – அஸ்ரப் மகாவித்தியாலய மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும் அந்த மைதானம் கூட இடவசதியற்றதாகவும், ஏனைய வசதிகள் குறைந்ததாகவும் காணப்படுவதால், பொது மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு இங்குள்ள விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்