மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

🕔 May 11, 2016

Leopard - 013– க. கிஷாந்தன் –

க்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழந்து விட்டதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தில் மேற்படி சிறுத்தைக் குட்டி ஒப்படைக்கப்பட்டது.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டதையடுத்து,  குறித்த சிறுத்தைக் குட்டியை தொழிலாளர்கள் பிடித்தனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரிகள், சிறுத்தை குட்டியை மீட்டு கொண்டு சென்றனர்.

போகும் வழியில், சிறுத்தைக் குட்டி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்