தலைப்புச் செய்திகள்

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

ண்டி மற்றும் கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (17) சென்று, விகாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருணாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.