லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

🕔 July 6, 2024

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

54,000 ரூபாயை லஞ்சமாக பெற முயன்ற, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவருமே – லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜ முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்