கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது

🕔 February 14, 2024

பெருமளவிலான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கண்டி – கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பல்வேறு பகுதிகளில் பல தனியார் மருத்துவ நிலையங்களை நடத்துபவர் எனக் கூறப்படுகிறது.

ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்யும் போது, மேற்படி வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் – இரவு வேளையில் தனது வாகனத்தில் பயணித்து இந்த மருந்து விற்பனையை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வைத்தியர் கம்பளை நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்