யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின

🕔 December 31, 2023

‘யுக்திய’ எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

189 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,298 நபர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், 1,018 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரபல குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 558.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, சட்ட விரோத சொத்துகள் விசாரணை பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 858 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விவரங்கள் பின்வருமாறு:

  • 11 கிலோ 600 கிராம் ஹெரோயின்
  • 08 கிலோ 378 கிராம் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’)
  • 297 கிலோ 8 கிராம் கஞ்சா
  • 2,110,500 கஞ்சா செடிகள்
  • 119 கிலோ 600 கிராம் ‘மாவா’
  • 35 கிலோ 800 கிராம் ஹாஷ் (HASH)
  • 01 கிலோ 70 கிராம் ஹஷிஷ்
  • 03 கிலோ 700 கிராம் ‘துல்’ (‘Thul’)
  • 555 கிராம் குஷ் கஞ்சா
  • 72,272 போதை மாத்திரைகள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்