தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி

🕔 December 14, 2023

தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய விமானங்கள் ஒரே இரவில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்ளைத் தாக்கி அழித்ததில், 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து ஜெனின் பகுதியில் – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி நிறுவனம் மற்றொரு ஊழியர் கொல்லப்பட்டதை அடுத்து, ஒக்டோபர் 7 முதல் இறந்த தமது ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 135 ஆக உள்ளது என, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 18,608 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்