பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது
– அஷ்ரப் ஏ சமத் –
பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
61 வயதுடைய சந்தேக நபர் – குணசிங்கபுரவில் உள்ள வீடொன்றில், குறித்த பொருட்களைக் களஞ்சியப்படுத்தியிருந்த நிலையில், அவரை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர்.
பாலியல் நடத்தைகளுக்கு பயன்படுத்தப்படும் இம் மருந்து வகைகளை குறித்த நபர், இந்தியாவிலிருந்து கொண்டு வந்து, கொழும்பு 12 – சில்வா சுஜித் குறுக்குத் தெரு எனும் முகவரியிலுள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தியிருந்தார்.
மேல்மாகாணம் – கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் புத்திக்க ராஜபக்வுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் – இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.