அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடு உள்ளதா: 1905 ஐ அழையுங்கள்

🕔 September 11, 2023

ரச அதிகாரிகளின் தவறான செயல்கள் குறித்து முறையிடுவதற்காக நேரடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து 1905 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.

இந்த முறைப்பாடுகளை விசாரிக்க ராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முறைப்பாடுகளை விசாரிப்பதில் தாமதம் ஏற்படும் போது, முறைப்பாடு செய்யும் மக்களுக்கு ஏற்படும் அநீதிகளைத் தடுக்கும் வகையில் உடனடியாகச் செயற்பட்டு தீர்மானங்களை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்