தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு

🕔 February 17, 2023

ள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் கடினம் என, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருக்கிறார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது..

அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணத்தை ஒதுக்க முடியும் என்ற போதிலும், அந்த சுற்றறிக்கையின் கீழ் தேர்தல் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்படவில்லை என நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்படியிருந்தும், அத்தியாவசிய சேவைகள் வகையைச் சேராத நிறுவனங்களுக்குப் பணத்தை வழங்குவதற்கு, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியைப் பெற வேண்டும் என – நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக, ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்