விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர்

🕔 February 17, 2023

யிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் முறையிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பயிர்களை அழிக்கும் 06 விலங்குகள் பயிர்களை நாசம் செய்தால் அவற்றினைக் கொல்ல முடியும் என்றார்.

செங்குரங்கு அல்லது வால் இல்லாக் குரங்கு, மயில், குரங்கு, ராட்சத அணில் (மர அணில்), முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி ஆகியவை – சமீபத்தில் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் விவசாயிகள் சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் என அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.

அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, இந்தச் சிக்கலைத் தீர்க்க வேறு வழிகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்