பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

🕔 November 5, 2021

ப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் 42 வயதுடைய மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் – சோதனை மேற்கொண்ட போது, பயணப் பையொன்றில் சடலமொன்று இருப்பதைக் கண்டனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்