கொரோனா: 30ஆவது மரணம் பதிவு
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மரணித்தவர் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபராவார்.
இவர் ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
மேற்படி நபர் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மரணமடைந்தார்.