கொரோனா: 30ஆவது மரணம் பதிவு

🕔 November 7, 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மரணித்தவர் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபராவார்.

இவர் ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

மேற்படி நபர் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மரணமடைந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்