பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி

🕔 October 10, 2020

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.

இந்த காரணத்தால் அந்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள இந்த மாணவி பாணந்துறை மருத்துவமனையின் பிரதான தலைமை தாதியின் மகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்