மினுவாங்கொட தொழிற்சாலையில் 323 கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

🕔 October 6, 2020

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 323 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் 1400 பேர் பணியாற்றி வரும் நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 323 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்