பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

🕔 October 6, 2020

ல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 11ஆம் திகதி தரம் 05 மாணவர்களுக்குரிய புலமைப் பரிசில் பரீட்சையினையும், 12ஆம் திகதி தொடக்கம் உயர்தர பரீட்சையையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்