எதிர்வரும் திங்கட்கிழமையை, பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவிப்பு

🕔 March 14, 2020

நாளை மறுதினம் திங்கட்கிழமையை, பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கையாக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

நாட்டில் 10 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பாடசாலைகளுக்கு ஏப்ரல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்