உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

🕔 September 29, 2015

Ranil - 01ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம்  மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;

“எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் கைகோர்த்துள்ளன. பிரதான கட்சிகள் கைகோர்த்துள்ளமையினால், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைப்பதாக நினைத்து விடக் கூடாது. உள்ளளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஆயினும், எதிர்வரும் உள்ளளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய அரசாங்கத்தில் கைக்கோர்த்துள்ள கட்சிகள் இரண்டும் தனித்தனியே  போட்டியிடும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்