பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

🕔 September 29, 2015

Protest - Makeliya - 02– க.கிஷாந்தன் –

ஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, ஆசிரியரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்து, அப்பிரதேச மக்கள், குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த ஆசிரியர், மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயம், 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, தனியார் வகுப்புக்கு வருமாறு அழைத்து, பலமுறை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 04 மாணவிகளும் தமது பெற்றோர் ஊடாக, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாட்டினைச் செய்திருந்தனர். இதனையடுத்து, சந்தேக நபரான ஆசிரியரை நேற்று திங்கட்கிழமை கைது செய்த மஸ்கெலியா பொலிஸார், இன்று செவ்வாய்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதேவேளை, மேற்படி நான்கு மாணவிகளும் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் – மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனமற்றிருந்த பாடசாலை அதிபர், உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், மேற்படி சம்பவத்துக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்றும், சந்தேக நபரான ஆசிரியரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பெற்றோரும் பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.Protest - Makeliya - 03Protest - Makeliya - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்