குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

🕔 December 9, 2018

– அஸ்ரப் ஏ சமத் –

குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

Iகுடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய முஹமட் முர்சித் என்பவரே, இவ்வாறு விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

நேற்று இரவு 11.45 மணியளவில் குடிபோதையில் காரை வேகமாக செலுத்திய மேற்படி நபர், கல்கிசை நீதிமன்றம் பகுதியிலிருந்து ரத்மலானை வரை பிழையான திசையில் பயணித்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட விபத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.

முதலில் கல்கிசை நீதிமன்றம் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துக் கொண்டு, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சப்றாஸ் எனும் 18 வயது வாலிபரை, மேற்படி கார் மோதியுள்ளது. இதில் அந்த வாலிபர் பலியானார்.

அடுத்து முச்சக்கர வண்டி சாரதி அனுஜ எதிரிசிங்க (18வயது) என்பவரையும் மேற்படி கார் மோதி விட்டு, தொடர்ந்து பயணித்துள்ளது.

அதன் பின்னா்  கல்கிசை பொலிஸ் நிலையத்தினைத்  தாண்டி, மேலும்  பிழையான திசையில் கார் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது. இதன்போது அந்த வேனைச் செலுத்திய சாரதி  மொஹமட் கவுஸ் றிஸ்வான் என்பவர் (வயது 48) ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வேனில் பயணித்த இரு சிறுவா்களும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸாா் தெரிவித்தனா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்