கைத்துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் நபர் கைது

🕔 April 6, 2018

கொட்டாஞ்சேனை – ராமநாதன் அடுக்கு மாடியில் வசிக்கும் ஒருவர்,  துப்பாக்கியொன்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு ரிவோல்வர் கைத்துப்பாக்கியும், 06 தோட்டாக்களும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

35 வயதுடைய சந்தேக நபர், கொழும்பு – 13 பகுதியில் வசிப்பவர் எனத் தெரியவருகிறது.

இந்த நிலையில், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் இன்று ஆஜர் செய்யப்டுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்