ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான ஜானக பண்டார தென்னகோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஆகியோர், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ள தொகுதி அமைப்பாளராக ஜானக பண்டார தென்னகோனும், பாத்ததும்பர தொகுதி அமைப்பாளராக லொஹான் ரத்வத்தயும் செயற்பட்டு வந்தனர்.
இதேவேளை, ஜானக பண்டாரவின் இடத்துக்கு, தம்புள்ள தொகுதி இணை அமைப்பாளர்களாக மாகாணசபை உறுப்பினர் டப்ளியு.எம். யசமன்ன மற்றும் தம்புள்ள வர்த்தக சங்க தலைவர் யு.ஆர். தயானந்தசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.
அதேபோன்று, பாத்ததும்பர தொகுதி அமைப்பாளராக, பாத்ததும்பர பிரதேச சபைத் தவிசாளர் டப்ளியு.எம். சமரவீர பண்டார வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 17 பேருக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.