கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார்
🕔 April 25, 2017
– அஷ்ரப் ஏ சமத் –
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.
கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து மேற்படி புதிய வாகனத்தை, பிரதியமைச்சர் கையளித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் நாகூர் ஆரிப், புதிய வாகனத்தை பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.
சுகாதர அமைச்சர் டொக்டா் ராஜித்த சேனாரத்தினவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.
கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து மேற்படி புதிய வாகனத்தை, பிரதியமைச்சர் கையளித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் நாகூர் ஆரிப், புதிய வாகனத்தை பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.
சுகாதர அமைச்சர் டொக்டா் ராஜித்த சேனாரத்தினவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.