பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; நான்கு மாதங்கள் கடக்கும் சிறை வாசம்
பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா இந்த உத்தரவினை இன்று புதன்கிழமை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.
ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பிலுள்ள புனித மரியாள் ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.