கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு

🕔 January 6, 2022

– பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ‘ஷில்பா அபிமானி’ மாகாண கைவினைப் போட்டி 2021இல், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு வகையான தயாரிப்புக்களை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.

தேசிய கைவினைப் பேரவையினால் நடத்தப்பட்ட மேற்படி போட்டி நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் ஆர்.யூ.ஏ. ஜெலீல்,முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ‘ஷில்பா அபிமானி’ மாகாண கைவினைப் போட்டி 2021இற்கான மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டியில் பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்