ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம்

🕔 January 6, 2022

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மரணித்தவர் கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் – கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நொவம்பர் மாதம் 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் 2021 ஏப்ரல் 06 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்