திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார்.
பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.
இவர் 2010ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தில் இணைந்து கொண்டார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் – மூவர் பலியாகியுள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.