முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார் 0
குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். தொல்பொருள் என்பது மரபுரிமையாகும். அது தேசிய அடையாளம். அதனை மாற்ற முயற்சிப்பது தேசத்துரோக செயலாக கருதப்படும்.