நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா
மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.
இவர் கடந்த காலங்களில் தொழில் அமைச்சர், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், தோட்டத் தொழில் அமைச்சர், நிதி ராஜாங்க அமைச்சர், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மற்றும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் ஆகிய பதிகளை வகித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துள்ள மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.