ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

🕔 June 19, 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்