100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

🕔 June 11, 2021

ழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி டோஸ்கள் ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்