5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

🕔 June 1, 2021

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார்.

இலங்கைக் கடலில் தரித்திருந்த ‘எக்ஸ் பிரஸ் பேல்’ (X-Press Pearl) என்ற கப்பல் தீப்பற்றியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. 65 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் நன்மை அடையவுள்ளன.

இதேவேளை ‘எக்ஸ் பிரஸ் பேல்’ கப்பல் விபத்துக்குள்ளானமையினால் கடற்றொழில் துறைக்கு ஏற்பட்ட நஷ்டங்களை மதிப்பீடு செய்து கடற் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

நாளாந்த வருமானத்தை இழந்த மீனவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் காஞ்சன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்