கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல்

🕔 May 5, 2021

– பாறுக் ஷிஹான் –

ல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த  நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸாருடன் இணைந்து சாய்ந்தமருது வேப்பையடி வீதியில் உள்ள வீடொன்று   சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு ஐஸ் போதைபொருள் வியாபாராத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 330 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டனர்.

அதேவேளை  இஸ்லாபாத்தைச் சேர்ந்த ஒருவர் 60 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவர் 350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவுடனும் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1490 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்தவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இவர்கள் கல்முனை  நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (4) முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்